Wednesday, August 13, 2008

முதலமைச்சர் யார்?

மிகுந்த பெருந்தன்மையுடன் எவ்வித நிபந்தனையுமின்றித் தமது கட்சியைத் தி.மு.க.வுடன் இணைத்துள்ளதால் செல்வி செயலலிதாவே முதல்வர் பொறுப்பு ஏற்கவேண்டும் எனக் கலைஞர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கலைஞரின் இந்த வேண்டுகோளை அவரது சார்பில் மு.க.அழகிரியும் மு.க.ச்டாலினும் போயசு தோட்டத்திற்குச் சென்று கூறியுள்ளனர்.
எனினும், இயக்கத்தின் மூத்த தலைவரும் இன்றைய தேசியத் தலைவர்களில் ஒருவருமாகிய கலைஞர் இருக்கும் போது, அரசியலில் அவரைவிட இளையநிலையில் உள்ள தாம் பொறுப்பேற்பது எவ்வகையிலும் பொருந்தாது எனத் திட்டவட்டமாகச் செல்வி செயலலிதா கூறிவிட்ட்தாகத் தெரிகிறது.

No comments: