அத்வானி முழக்கம்
சேதுசமுத்திரத்திட்டத்தை உடனே நிறைவேற்றுமாறு பா.ச.க.தலைவர் அத்வானி மைய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.இராமர் பாலம் பற்றித் தாங்கள் கொண்டிருந்த தவறான அணுகுமுறையை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.”உலகமே இராமர் உலகம்;அண்டசராசரங்களும் இராமர் படைப்பு.இராமர் இல்லாத இடமே இல்லை.இதனை மறந்துவிட்டு ஒரு சிறிய மணல்திட்டு மட்டுமே இராமருக்கு உரியது என்பதனைப் போலத் தாங்கள் கூறிவந்தது வருந்தத் தக்கது” என்றார்,அவர்.சேது சமுத்திரத்திட்டத்திற்கு இராமர் சமுத்திரத்திட்டம் என்று கூடப் பெயர் வைத்துக்கொள்ளலாம் என்னும் கலைஞர் கருணாநிதியின்
பெருந்தன்மையைப் பாராட்டிய அவர்,இதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
அங்ஙனம்பெயர்வைத்தால் ஏனையசமுத்திரங்கள்இராமருக்குத் தொடர்பற்றவை என்னும் தவறான கருத்து ஏற்பட்டுவிடும் என அவர் கூறினார்.
சேதுசமுத்திரத் திட்டத்திற்கு அடித்தளம் அமைத்தது பா.ச.க. ஆட்சியே என்னும் உண்மையைத் தமிழ் மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment